ASSALAMU ALAIKKUM - Your Feedbacks and Wishes to bathuru86@yahoo.com

Wednesday, January 20, 2010

ஷைத்தானின் அடிச்சுவடுகள்! தர்காஹ்வாதிகளே...............

நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)
என் இனிய தர்காஹ்வாதிகளே மேற்கண்ட நபிமொழிக்கு ஏற்றாற்போன்று நடந்துக்கொள்கிறீர்களே கீழ்கண்ட செயல்கள் நபிகள் நாயகம் காட்டித்தந்தவையா அல்லது அல்லாஹ் திருமறையில் காட்டித்தந்ததா? சிந்திக்க மாட்டீர்களா?
சந்தனக்கூடு
கொடிமரம்
சமாதி வழிபாடு
அவ்லியாக்களுக்கு நேர்ச்சை
கப்ரை உயர்த்திக் கட்டுதல்
தஸ்பீஹ் மணி உருட்டுதல்
மவ்லூது பாடல்கள்
கவ்வாலி இசைக்கச்சேரிகள்
உரூஸ் உண்டியல்
யானை குதிரை ஊர்வலங்கள்
பிறந்த நாள் விழா எடுப்பது
இறந்தவர்களுக்குச் செய்யும் சடங்குகள்
வட்டி வாங்குதல்
வரதட்சணை பிடுங்குதல்
ஜோதிட நம்பிக்கை
கருமணி தாலி கட்டுதல்
வாழைமரம் நடுதல்
ஆண்கள் தங்கம் அணிவது
மஞ்சள் நீராட்டுவிழா
சுன்னத் கத்னா திருவிழா
ஒருமுறை மறுபடியும் கீழ்கண்ட நபிமொழியை படியுங்கள்
நீங்கள் யூத கிறிஸ்தவர்களின் வழிமுறைகளை ஜானுக்கு ஜான் அடிக்கு அடி பின்பற்றுவீர்கள். எந்த அளவுக்கு என்றால் அவர்கள் ஒரு உடும்பு பொந்துக்குள் சென்றால் நீங்களும் செல்வீர்கள். (புகாரி : 7319 3456)

இணைகற்பிப்பவர்களுக்கு நரகமே நிரந்தரம்(ஏக இறைவனை) மறுப்போராகிய வேதமுடையோரும், இணை கற்பிப்போரும், நரக நெருப்பில் இருப்பார்கள். அவர்களே படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள். (திருக் குர்ஆன் (98:6)

இணைகற்பித்தால் நல்ல அமல்கள் அழிந்துவிடும்
அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த(நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.(திருக் குர்ஆன் 6:88)


இணைகற்பித்தால் மறுமையில் நஷ்டவாளியாகிவிடுவீர்கள்நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நீர் நஷ்டமடைந்தவராவீர். மாறாக அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக! என்று (முஹம்மதே) உமக்கும் உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப் பட்டது. (திருக் குர்ஆன் 39:65,66)

இறைத்தூதர்களும் இணைகற்பிக்கக்கூடாது என எச்சரிக்கை!”நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!” என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)

No comments:

Post a Comment